Tuesday, December 3, 2013

வைகறை மேகமாய்


இலக்கணம்  கூட தோற்றுப்போகும்

உமது  நட்பில்,

புது இலக்கியம் கூட உருவாகும்

நமது உறவில்…..



எனது மகிழ்ச்சியில் என்றும் நீயும்

ஒரு பாத்திரமாய்,

எனது சோகத்தில் உன் ஆறுதல்கள்

இன்றும் பத்திரமாய்….



என் கல்லூரி ஆண்டுகள் உன்னுடன்

கழிந்தன நாட்களாய்,

என் கல்லூரி கனவுகள் உன்னுடன்

மலர்தன மல்லிகையாய்…..



நிலவு கூட விடியலுக்கு விடை கொடுக்க

இயலும் ஆனால்

என்னால் உனக்கு விடை

கொடுக்க இயலாது…..



நண்பா ! என்றும் வானுலகில்

வைகறை மேகமாய் நீ,

உன்னை தொடர்ந்து வரும்

ஈரக்காற்றை நான்....

No comments:

Post a Comment