காதலன்
கண்டுகிட்டேன் காதலியே மிகவும் தாமதமாக
உன் இதயத்தில் நான் இல்லை என்று
புன்னகை பூக்க மறந்த நாட்களிலும் உன் செவ்விதழ்களின்
ஸ்பரிசத்தில் கூடு கட்டி வாழ்ந்தேனே,
தேனை தீண்டாத வண்டு என்று
வாழ்கையை தேடும் வயதில் தினம் உன்னை தேடினேனே,
உன் கண் ஈர்ப்பு விசையில் என்னை
உன்னிடம் தொலைத்தேனே என்று
திகட்டாத உன் மொழினலே உன்னை தத்தெடுத்து
கொண்டேனே, என் இதய ஆசனத்தில்
முடிசூட்டும் மகாராணி நீ என்று
நேற்று நீ கொடுத்த பத்திரிகையின் விளிம்பில்
மஞ்சளும் என்னை பார்த்து சிரித்தது,
நீயும் சாதாரண காதலன்தான் என்று
இன்று தொலைத்து போன என் இதயம் திரும்ப கிடைத்தது,
இந்த இடைகால விடுமுறையில் கண்டவை
எல்லாம் ஏமாற்றமே என்று
நாளை நான் உன்னை மறக்க நினைத்தாலும்,
தெளிவாக புரிந்து போனது,
அது என் இதயம் சாகும் வரை முடியாது என்று
கண்டுகிட்டேன் காதலியே மிகவும் தாமதமாக
No comments:
Post a Comment