Tuesday, December 3, 2013

திரைகடல் ஓடியும்

உருவமில்லாத உயிருக்காக தன் மனதில்

உளிக்கொண்டு செதுக்கியவள் அவள்,

கருவுற்ற அப்பெண்ணின் எண்ணங்களில்

கனவுகளுக்கு பஞ்சமில்லை….



சிற்சில ஆசைகளும் கூட நிறைவேற

துடிக்கும் அவள் பிள்ளைக்காக,

தவத்தில் சிப்பியை விட குறைவுதான்

ஆனால் முத்துவிற்கு விலையில்லை….



மறைமுகமாய் வாழும் அக்குழந்தைக்கு

பத்துமாத வளர்சிறை,

பச்சிளம் பிஞ்சிற்கு தாலாட்டு

வளையல் ஓசைக்கு இணையில்லை…..



கனவு தாயின் ஒவ்வொரு கணமும்

சுமையை தாங்கும் இன்பவலி,

நாட்கள் திங்களாய் விடிந்ததும்

வெளியேறுவதில் தடையில்லை……



திரைகடல் ஓடியும் கிடைக்காத அன்பு

பிள்ளை பிறவிப்பயன் பெற்றதும்,

தாயின் முதல் ஸ்பரிசத்தில்….

No comments:

Post a Comment