Tuesday, December 3, 2013


ஹைக்கூ



எதிர்பார்ப்பு

என்னவர்களே !!!

நான் இறந்த பின்பு என்னுடைய

கல்லறைக்கு மலர் தூவி வையுங்கள்,

என்னால் நேசிக்கபட்டவள் என்றாவது

என்னை நேசித்து வரக்கூடும்.........


கடவுள்

சித்தர்களால் சிந்திக்க முடியாமலும்

புத்தர்களால் வர்ணிக்க முடியாமலும்

உள்ள ஓர் உருவம்

சிற்பியால் செதுக்கப்படுகிறது !!


கவிதை

பொய்யான மெய் கற்பனை

மெய்யான கற்பனை கவிதை.....


மரணம்

யாவகை வாக்கியம் ஆனாலும்

இறுதியில் முற்றுப்புள்ளி உண்டு.


வெட்கம்

காதலை வெளிப்படுத்த பெண்களுக்கே

உரித்தான ஒரு மொழி,

தற்போது ()றைந்துபோனது !!!!!!

             
 மௌனம்

ஆதாம் ஏவாள் காலத்து

காதல் மொழி,

இன்று விரதமாகிவிட்டது !!



நவீன காதலி

களவும் கற்று மறந்துவிட்டு ,

காதலனின் சில்லறையில் !?


தியாகம்

கொலை செய்யப்பட்ட நண்பனின்

கையில் அட்சதை பூக்கள் !!!


மறைமுகம்

மேகத்தில் மறைந்துவிட்ட சூரியருக்கு

நிலவிடத்தில் காதல் ஆனால்

பூமியை முத்தமிட்டது மழை !!!



அரசியல்

லஞ்சத்தின் மாயவலை விளையாட்டு,

நாலு கால்களில் அமர

இரண்டு கால்களின் தந்திரம்.....





நினைவு

அவள் கெஞ்சல்களின் பெட்டகம்

தற்போது என் செயற்கை கனவில் மட்டும் !!

                        
நட்பு

"ந"ம்பிக்கை-க்கும்

"பு"ன்னகை-க்கும்

நடுவில் உள்ள உறவு......



தோல்வி

எட்டி விட முடியாமல் போன வெற்றியை,

தொட்டு விட துடிக்கும் மரணவலி.





கலியுகக் காதல்

வெள்ளைத் தோலுக்கு ஆசைப்படும் மானிடர்களும்

வெள்ளிக்காசுக்கு ஆசைப்படும் மங்கைகளும்

கொஞ்ச நாட்கள் கொஞ்சிப்  பழகும் உறவு 



காதல் தோல்வி

அவள் பாத சுவடுகள் புதைந்துவிட்ட

பாதையை நோக்கி போகிறது ,

அவளது கண்முன் கோழையாகிவிட்ட

என் காதல்.........



போதனை

சொர்க்கம் என்னவென்று என் ஆசானிடம் கேட்டேன் ?

"தெருவெல்லாம் தேவதைகள் பன்னீர் தூவி உன் ஆசைகளை 

நிறைவேத்துவர்",

அப்போது நரகம் என்றால் ?

"அதே தேவதைகள் கண்ணடித்து காதல் செய்து உன் ஆசைகளை 

அடக்கம் செய்வர்" என்றார்.


குறள் எண் 1331

"காதலை காசாக்கி காதலனை லூசாக்கி

கண்டவனை கைபிடிப்பாள் கன்னி"

No comments:

Post a Comment